அன்று...
உன் சுவாசம் தொட்டதாலேயே,
இந்தக் காற்றைக் காதலிக்கிறேன்
உன் பாதம் பட்டதாலேயே,
இந்த மண்ணை காதலிக்கிறேன்
உன்னை ஈன்றதாலேயே,
உன் தாயைக் காதலிக்கிறேன்
உன்னோடு உறவானதாலேயே,
உன் குடும்பத்தையும் காதலிக்கிறேன்
உனக்கு பட்டம் தந்தாலேயே,
இந்தக் கல்லூரியைக் காதலிக்கிறேன்
இன்று...
நீ என் மீது கோபம் கொண்டாய்,
எனக்கு சுவாசிக்க காற்று இல்லை
என்னால் நிலை கொள்ள முடியவில்லை
என் தாயின் அன்பு தேற்றவில்லை
என் பிள்ளைகள் பசி புரியவில்லை
நம் பட்டங்களால் புத்தி தெளியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக