வெள்ளி, 17 டிசம்பர், 2010

நெஞ்சம் சொல்லுதே

நேற்று கேட்ட பாடல்களில் பிடித்த சில வரிகள் இதோ...

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?

என் காதலும் என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...

பிரிவு

இன்று மகளைப் பள்ளிக்கு

ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றேன்

பள்ளியில்

அவள் இறங்கிக் கொண்டாள்

மனதில்

பாரம் ஏறிக் கொண்டது.

சனி, 11 டிசம்பர், 2010

காதல்

அன்று...
உன் சுவாச‌ம் தொட்ட‌தாலேயே,

இந்தக் காற்றைக் காதலிக்கிறேன்
உன் பாத‌ம் ப‌ட்ட‌தாலேயே,
இந்த ம‌ண்ணை காதலிக்கிறேன்
உன்னை ஈன்ற‌தாலேயே,
உன் தாயைக் காதலிக்கிறேன்
உன்னோடு உற‌வான‌தாலேயே,
உன் குடும்ப‌த்தையும் காதலிக்கிறேன்
உனக்கு பட்டம் தந்தாலேயே,
இந்தக் கல்லூரியைக் காதலிக்கிறேன்


இன்று...
நீ என் மீது கோபம் கொண்டாய்,
எனக்கு சுவாசிக்க காற்று இல்லை
என்னால் நிலை கொள்ள முடியவில்லை
என் தாயின் அன்பு தேற்றவில்லை
என் பிள்ளைகள் பசி புரியவில்லை
நம் பட்டங்களால் புத்தி தெளியவில்லை